Wednesday, February 23, 2011

சோதனைகளை சாதனையாக்குமா பாகிஸ்தான்?

அண்மைக்காலமாக பல சோதனைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது நடைபெறும் 10 ஆவது உலகக் கிண்ண போட்டியில் தனது சாதனைகளை நிலைநாட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இன்று அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பாகிஸ்தான் அணி கென்யா அணியை எதிர்கொள்ள உள்ளது. 'ஏ" பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

Sunday, February 6, 2011

இலங்கை அணி அபாரம்: தொடர் இலங்கை வசம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது.

கொழும்பு எஸ்.சி.சி மைதாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் 30 ஓட்டங்களையும், தரங்க 39 ஓட்டங்களையும் பெற்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

Friday, February 4, 2011

உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு



உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளதையடுத்து, பாகிஸ்‌தான் அணியின்தலைவராக சயிட் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர் பாகிஸ்தான் கிரிக்கெட்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நியுசிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரை அப்ரிடி த‌லைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. எனவே, இந்த அப்ரிதி தலைமையே, உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலும் தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அணியின் தலைவர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் அல்லது சயிட் அப்ரிடியா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்ற


தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தரங்கவின் சதத்துடன் இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெயில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பரத் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டெரன் பிராவோ 39 ஓட்டங்களையும்இ சர்வான் 21 ஓட்டங்களையும்இ டயன் பிராவோ 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க 3 விக்கட்டுகளையும்இ குலசேகர மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates