Saturday, July 16, 2011

அப்ரிடி இன்னும் பக்குவம் அடையாதவர்: கம்பீர்

பாகிஸ்தான் முன்னாள் அணித் தலைவர் அப்ரிடி இன்னும் பக்குவம் அடையவில்லை என்று இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, இந்த வெற்றியை மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள கம்பீர், 'மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உலகக் கிண்ண வெற்றியை அர்ப்பணிப்பதாகக் கூறியது எனது தனிப்பட்ட கருத்து.

Thursday, March 10, 2011

இலங்கை அணி 139 ஓட்டங்களால் இலகு வெற்றி




இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 139 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது. 


கண்டி பல்லேகல மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் தரங்க அபாரமாக 
துடுப்பெடுத்தாடினர்.


இருவரும் முதல் விக்கட்டுக்காக 282 ஓட்டங்களை பெற்றமை உலகக் கிண்ண போட்டிகளில் சாதனையாக பதியப்பட்டுள்ளது. இவ்விரு வீரர்களும் தனது முதல் உலகக் கிண்ண சதத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


தரங்க 133 ஓட்டங்களையும், டில்சான் 144 பெற்று ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் 45ஆவது ஓவர் வரை துடுப்பெடுத்தாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனினும் அடுத்த 5 ஓவர்களில் இலங்கை அணியின் 4 விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டன. முறையே பெரேரா 3 ஓட்டங்களுடனும், ஜெயவர்தன 9 ஓட்டங்களுடனும், மெத்தியூஸ் எவ்வித ஓட்டம் பெறாதும், சில்வா 8 ஓட்டங்களுடனும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். 


களத்தில் சங்கக்கார 11 ஓட்டங்களுடனும், சமரவீர 8 ஓட்டங்களுடன் இருக்க 50 ஓவர் நிறைவில் இலங்கை அணி 6 விக்கட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை பெற்றது.


பந்து வீச்சில் சிம்பாப்வே அணியின் சார்பாக எம்பொபு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


328 எனும் கடின வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடிய போதும் பின்னர் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. 


19.5 ஓவர்களில் 116 ஓட்டங்களை பெற்றிருந்த போது சிம்பாப்வே அணி தனது முதல் விக்கட்டை இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டெய்லர் அதிரடியாக 80 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க மறுபுரத்தில் இருந்த சகபாவா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 


இதனை பின் தொடர்ந்த வீரர்கள் 20 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 139 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


இலங்கை அணியின் பந்து வீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும், முரளிதரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியின் மூலம் முரளிதரன் இலங்கை மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 150 கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை அணி வெற்றியின் மூலம் காலிறுதியை உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பிரகாசித்த டில்சான் தெரிவு செய்யப்பட்டார்.



Wednesday, February 23, 2011

சோதனைகளை சாதனையாக்குமா பாகிஸ்தான்?

அண்மைக்காலமாக பல சோதனைகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் தற்போது நடைபெறும் 10 ஆவது உலகக் கிண்ண போட்டியில் தனது சாதனைகளை நிலைநாட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இன்று அம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் பாகிஸ்தான் அணி கென்யா அணியை எதிர்கொள்ள உள்ளது. 'ஏ" பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், கென்யா அணிகள் மோதுகின்றன. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் வீழ்த்திய போதும் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

Sunday, February 6, 2011

இலங்கை அணி அபாரம்: தொடர் இலங்கை வசம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது.

கொழும்பு எஸ்.சி.சி மைதாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் 30 ஓட்டங்களையும், தரங்க 39 ஓட்டங்களையும் பெற்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

Friday, February 4, 2011

உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு



உலக கிண்ண அணித்தலைவராக அப்ரிடி தேர்வு
உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளதையடுத்து, பாகிஸ்‌தான் அணியின்தலைவராக சயிட் அப்ரிடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர் பாகிஸ்தான் கிரிக்கெட்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நியுசிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரை அப்ரிடி த‌லைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. எனவே, இந்த அப்ரிதி தலைமையே, உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலும் தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அணியின் தலைவர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் அல்லது சயிட் அப்ரிடியா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்ற


தரங்க சதம்: இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகு வெற்றி
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தரங்கவின் சதத்துடன் இலங்கை அணி 8 விக்கட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெயில் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பரத் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய டெரன் பிராவோ 39 ஓட்டங்களையும்இ சர்வான் 21 ஓட்டங்களையும்இ டயன் பிராவோ 39 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய ஏனைய வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மலிங்க 3 விக்கட்டுகளையும்இ குலசேகர மற்றும் முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

Monday, January 31, 2011

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள்: முதல் போட்டி மழையால் இடைநிறுத்தம்



இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள்: முதல் போட்டி மழையால் இடைநிறுத்தம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 ஒரு நாள் கொண்ட போட்டி தொடரில் பங்கேற்கின்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுபுரத்தில் இருந்த ஹெட்ரியன் பரத் 129 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்று ஒரு நாள் போட்டியில் தனது முதலதவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

மேலும் பிராவோ 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சர்வான் 75 ஓட்டங்களை பெற்று 34 ஆவது அரைச் சதத்தை பெற்றார்.


இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 3 விக்கட்டுகளையும், குலசேகர ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.


flagcounter

free counters

Google friend connect

 

Resistance Bands by Free Blogger Templates