இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள்: முதல் போட்டி மழையால் இடைநிறுத்தம்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிகள் 3 ஒரு நாள் கொண்ட போட்டி தொடரில் பங்கேற்கின்றது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுபுரத்தில் இருந்த ஹெட்ரியன் பரத் 129 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 113 ஓட்டங்களை பெற்று ஒரு நாள் போட்டியில் தனது முதலதவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
மேலும் பிராவோ 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சர்வான் 75 ஓட்டங்களை பெற்று 34 ஆவது அரைச் சதத்தை பெற்றார்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க 3 விக்கட்டுகளையும், குலசேகர ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.



No comments:
Post a Comment